எங்களின் நண்பர் ரிசான் செய்னுலாப்டீன் (ஜெமினா) அவர்களின் மனைவி ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்து "வாப்பா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுழி காலம் வாழ என் இதய பிராத்தனைகள்.வாழ்த்துக்கள் நண்பரே!
இன்னும் என் நினைவில் நிழலாடும் சுனாமியின் வடுக்கள் ... அன்று இதே தினத்தில் அதிகாலை திடிரென வந்த தொலைபேசி அழைப்பு சொன்ன செய்தி இன்றும் என் காதில் ரீங்காரம் செய்கின்றது.. "எம் ஊருக்குள் கடல் வந்துட்டாம்..சாய்ந்தமருது கல்யாண வீதியெல்லாம் கடந்து வந்துட்டாம். ரிஸ்வி டாக்டர் மௌத்தாஹிட்டாராம் ... "இன்னாளில்லாஹி வயின்னா இளைகி ராஜிஊன்" என்ற பிராத்தனைகளுடன் ஒரு கணம் என் ஊரைய்யும் என் உறவுகளையும் நினைத்து உள்ளம் பத பதைத்து... செய்திகளின் உண்மை நிலவரம் அறிய எனது சகோதரியின் தொலைப்பேசிக்கு அழைத்தபோது. ஒரே சத்தத்துடன் சட்டென்று அறுந்து போன உணர்வு.. கடல் வந்த எல்லையை அறிந்ததபோது. எனது தாய் மற்றும் உடன் பிறப்புக்களின் நிலை என்னவென்று ஒரு கணம் ஊகித்து உள்ளார்ந்த பிராத்தனைகளை அனைவருக்காகவும் செய்து கொண்டு.தடுமாறிய கணப்பொழுதுகள் வாழ்வில் மறக்க முடியாத ரணங்கள் .. கடல் ஊருக்குள் வந்ததாம்!.அது எவ்வாறு சாத்தியப்படும்? வாழ் நாளில் கேள்விபடாத, கண்களால் காணாத சம்பவம்.. நம்பவே முடிய வில்லை.. செய்திகளின் உயிரோட்டம் அறியும் ஆவலில் இணைய வளம் சென்று தகவல்களை என் சகோதரர் ...
இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபத் மக ராணியாக பதவி ஏற்று இன்று ஆறாம் நாள் பெப்ரவரி மாதம் அறுபது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் இங்கிலாந்து நாட்டின் அரசிக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். இந்த விசேட தினத்தை முன்னிட்டு நான் அனுப்பிய வாழ்த்துக்கு பக்கிங்க்ஹாம் மாளிகை விசேட நன்றிகளை தெரிவித்து வாழ்த்து அட்டைகளையும் இலத்திரனியல் மடல் மூலம் அனுப்பி உள்ளமை மகா ராணி மக்கள் மீது கொண்டுள்ள ஆர்வத்துக்கு சான்று பகர்கிறது எனலாம் ( இங்கே அழுத்தி மக ராணியாரின் அரண்மனை அனுப்பிய பதில் செய்தி மடலை பார்வை இடலாம் ) தனது நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் மகா ராணியார் தனது மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் அடுத்த ஆண்டில் இருந்து வெளி நாட்டு சுற்றுப் பயனங்கள தொடர உத்தேசம் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார். அடுத்த ஆண்டில் இலங்கையில் நடை பெற உள்ள பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டில் கலந்து கொள்வதாகவும் பக்கிங்க்ஹாம் மாளிகை தெரிவித்தும் உள்ளது.. 60௦ ஆண்டு வெள்ளி விழ கொண்டாடும் மகா ராணியாரின் ச...
கொரோனா காலத்தில் மக்கள் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சளி, இருமல் இப்படி பல நோய்களால் பீடிக்கப்பட்டு வருந்திக் கொண்டிருக்கிறார்கள். அது தவிர நாம் பீடிக்கப்பட்டிருக்கும் நோய் கோரனாவா டெங்கா அல்லது வேறு ஏதும் வைரஸ் காய்ச்சலா என்று சந்தேகிப்போருக்கு இந்தியாவை சேர்ந்த வைத்தியர் அருண் குமார் அவர்கள் வீட்டில் சிகிச்சை எடுப்பது எப்படி பற்றி தெளிவாக விளக்குகிறார் . வருத்தங்களால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வருந்துவோருக்கு ஆறுதல் தரும் காணொளியாகவும் உள்ளது .
Comments