வைர விழா கொண்டாடும் இங்கிலாந்தின் மகாராணிக்கு இனிய வாழ்த்துக்கள்

இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபத் மக ராணியாக பதவி ஏற்று இன்று ஆறாம் நாள் பெப்ரவரி மாதம் அறுபது ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் இங்கிலாந்து நாட்டின் அரசிக்கு என்  உளம் நிறைந்த வாழ்த்துக்கள். 
இந்த விசேட தினத்தை முன்னிட்டு நான் அனுப்பிய  வாழ்த்துக்கு  பக்கிங்க்ஹாம் மாளிகை  விசேட நன்றிகளை தெரிவித்து வாழ்த்து அட்டைகளையும் இலத்திரனியல் மடல் மூலம் அனுப்பி உள்ளமை மகா ராணி மக்கள் மீது கொண்டுள்ள 
ஆர்வத்துக்கு சான்று பகர்கிறது எனலாம் 
(இங்கே அழுத்தி மக ராணியாரின் அரண்மனை அனுப்பிய பதில் செய்தி மடலை பார்வை இடலாம் )
தனது நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் மகா ராணியார் தனது மக்கள் தரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ளதுடன் அடுத்த ஆண்டில் இருந்து வெளி நாட்டு சுற்றுப் பயனங்கள தொடர உத்தேசம் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.


அடுத்த ஆண்டில் இலங்கையில் நடை பெற உள்ள பொது நலவாய அரச தலைவர்களின் மா நாட்டில் கலந்து கொள்வதாகவும் பக்கிங்க்ஹாம் மாளிகை தெரிவித்தும் உள்ளது..

60௦ ஆண்டு வெள்ளி விழ கொண்டாடும் மகா ராணியாரின் சேவையை நினவு கூறும் முகமாக ரோயல் மெயில் இன்று தபால் முத்திரைகளை வெளியிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் 

நீடூழி வாழ்ந்து மக்களுக்கான உங்கள் சேவை தொடரட்டும் 

Comments

Popular posts from this blog

எனது சுனாமி நினைவலைகள் .

JAZAH CONSULTANTS